வியாழன், செப்டம்பர் 29, 2016

புதன், ஜூலை 13, 2016

 
ஒரே நாளில் 3 விசேஷங்கள்:
ஆகஸ்ட் 2-ந்தேதி ஆடி அமாவாசை, 18-ம் பெருக்கு, குருபெயர்ச்சி

இந்த வருடம் ஆகஸ்ட் 2-ந்தேதி அன்று ஆடி அமாவாசை, 18-ம் பெருக்கு, குருபெயர்ச்சி போன்ற முக்கிய 3 விசேஷங்களும் சேர்ந்து வருகிறது. ஓவ்வொரு மாதமும் அமாவாசை வருவது இயல்பு. இதே சமயம் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசையை சிறப்பாக போற்றுகிறார்கள்.

இந்த நாளில் சிவலாயங்களில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சதுரகிரிமலை, ராமேசுவரம், அழகர் கோவில் நூபுரகங்கையில் பக்தர்கள் குவிவார்கள். மேலும் மறைந்த தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யக் கூடிய நாளாகவும் ஆடி அமாவாசை திகழ்கிறது.
 
ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டாம் பெருக்கு விசேஷத்திலும் விசேஷமாகும். ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழிக்கு ஏற்ப இந்த நன்நாளில் கிராமங்களில் பெரும்பாலோனோர் தங்களது வீடுகள் முன்பு உள்ள காலி இடங்களில் விதைபோட்டு (பயிர்குழிஅமைத்து) வீட்டு தோட்டம் போடுவார்கள். மேலும் விவசாயத்திற்கு உகந்த நாளாகவும் போற்றப்படுகிறது.

இதே நாளில் சித்திரை திருவிழாவிற்கு வந்த கள்ளழகருக்கு தீர்த்த உற்சவம் நடைபெறுவதும் தனி சிறப்பு. இதோடு சாமியாடிகள் மற்றும் பக்தர்கள் அழகர் கோவிலில் நூபுரகங்கையில் தீர்த்தமாடி வீடுகளுக்கு புனித தீர்த்தம் எடுத்து செல்வார்கள். ஆண்டிற்கு ஓருமுறை குருபெயர்ச்சி நடக்கிறது. இந்த நல்ல நாளில் குரு பகவான் பார்வை கிடைத்தால் கோடி நன்மை கிடைக்கும் ஆகவே நம்மில் பலர் தங்களது ராசிக்கு குருபகவான் ஆதிக்கம் வருமா? என்று எதிர்பார்ப்பார்கள்.

குருபெயர்ச்சி நாளில் குருபகவான் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். சிலர் ராசிக்கு ஏற்றவாறு பரிகாரம் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். ஆகவே குரு பெயர்ச்சி எப்ப வரும்? என்று நம்மில் பலர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி அமாவாசை, பதினெட்டாம் பெருக்கு, குருபெயர்ச்சி ஆகிய விசேஷங்களும் ஓரே நாளில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி வருகிறது.

இதை நம்மவர்கள் விசேஷத்திலும் விசேஷமாக கருதுகிறார்கள். அதுவும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று விசேஷங்களும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி அன்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என்பது சந்தேகமில்லை.
 


வியாழன், மே 05, 2016

அங்கோர் வாட் கோயில், கம்போடியா
 

அங்கோர் வாட் கோயில்  உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ளது. உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ்  மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் சூரியவர்மன். ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் இந்த ஆலயத்தை கட்டினார்.
இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இதுவரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நாம் அறிந்திருந்த தகவல்களிலேயே மிகச் சிறந்த ஒன்று இது! ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் கம்போடியா நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய அங்கோர் வாட் கோயில். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.

பின்பு ஆறாம் ஜெயவர்மன் ஆட்சிக்கு வந்த பிறகு புத்த கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.
அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுக்கீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.
 

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேசியக்கொடியில் தேசிய சின்னமாக அங்கோர் வாட் - ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது.  
இரண்டாம் சூர்யவர்மன் இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம், வைணவத் தளமான இந்த கோயில்தான் இன்றுவரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலைப்பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள்!!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட சூர்யவர்மன் இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது. இதன் பின்னர் ஆறாம் ஜெயவர்மன் கைக்கு மாறியது. பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக புத்த வழிபாட்டு தளமாக மாற்றப்பட்டு, இன்று வரை இது புத்த வழிபாட்டு தளமாகவே செயல் பட்டு வருகின்றது!
பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்பட்டதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதிலமடையத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு António da Madalena என்ற போர்சுக்கீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை  பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகுதான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 27 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் தேசிய சின்னமாகஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!
 
 
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!
 

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.   
~ நன்றி: பெயர் தெரியாத இலங்கை வரலாற்று ஆய்வாளர்


புதன், ஏப்ரல் 20, 2016

முருகன் என்றால் அழகு...அழகன் என்றால் முருகன்...இந்த அழகனின் மற்ற பெயர்களை தெரிந்து கொள்ளலாமே!
1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன்: கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன்: கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன்: கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன்: சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன்: தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள்: செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன்: செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன்: சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன்: விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன்: வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன்:  ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன்: சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான்: முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன்: மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
~ வழங்கியவர். திரு. சுரேஷ் பூமாலை, பொள்ளாச்சி


வெள்ளி, ஏப்ரல் 15, 2016

 ஸ்ரீ ராமநவமி
(15-04-2016)
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. ராவணனை அழிப்பதற்காக பூமியில் தோன்றிய ஸ்ரீராமனின் அவதார வரலாறு மகிமை வாய்ந்தது. அயோத்தியை ஆண்டுவந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு.


ஆனால் நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது அவருக்கு பெரும் மனக்குறை. வசிஷ்ட முனிவரின் ஆலோசனைப்படி, மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தில் கிடைத்த பாயசத்தை தசரதர் தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர். பங்குனி மாதம் நவமியன்று கோசலை ராம பிரானை பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருகுணன் ஆகியோர் பிறந்தனர். தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன், வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதி லையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார்.


கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில், வாலியை வதம் செய்தார். பின்னர் சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்து விபிஷணனை இலங்கையின் அரசனாக நியமித்தார். சீதையை தீக்குளிக்க செய்து புஷ்பக விமானத்தில் அழைத்து கொண்டு, அயோத்தி சென்று முடிசூடி நல்ல முறையில் அரசாண்டார். ராமன் பிறந்த காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும்.


வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும்.


அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராமநவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.


நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை’ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர். இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.


ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின் பத்து நாட்கள் பின்பத்து எனப்படும். பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள். ஸ்ரீராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்ற போதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார்.


அவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும் பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம். ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமனை வணங்கி வழிபட்டால் நோய், நொடி விலகும். பாவங்கள் தீரும். வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் நம்மை வந்து சேரும்.
~ திரு.சுரேஷ் மும்மூர்த்தி, திருப்பூர்

வியாழன், ஏப்ரல் 14, 2016


துர்முகி தமிழ்ப்புத்தாண்டும் வழிபாட்டு முறையும்!
துர்முகி தமிழ்ப்புத்தாண்டு வியாழக்கிழமை பிறக்கிறது. துர்முகி என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. துர்முகி என்றிருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வோரு தமிழ்ப்புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது. துர்முக என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது, கல்விக்கு அதிபதியான புதன் பகவான். புதனின் அதிதேவதை ஹயக்ரீவர்.
ஞானம், கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்தான். இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால்,ஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு துர்முகி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதாவது, பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள ஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற பெயர் சூட்சம்மாக எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்ப்புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்?
தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதம் (ஏப்ரல் 14) முதல் தேதி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். சகல நற்காரியங்களையும், செய்வதற்கேற்ற காலம் இது. தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளை கேரள மக்கள் கொன்னம்பூ வைத்து பூஜிக்கின்றனர்.
கேரளாவில் சித்திரை விஷுவன்று கனி காண்பது மரபு. பங்குனி கடைசி நாள் அன்று இரவு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூச்சூடுவர். கோலமிட்ட மனைப்பலகையில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து இருபுறமும் குத்துவிளக்கு வைப்பார்கள். ஒரு தாம்பளத்தில் பூ, பழம், வெற்றிலைபாக்கும், இன்னொன்றில் கிண்ணங்களில் அரிசிபருப்பு, தங்க, வெள்ளிக் காசுகள், ஆபரணங்களும் வைப்பர். இன்னொரு தாம்பளத்தில் முக்கனிகளை வைப்பர். செவ்வாழை, நேந்திரம் வாழை, பலாப்பழம், கொன்றைப் பூச்சரம், தென்னம் பூ கொத்தும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து பூஜை அறைக்கு வந்து குத்துவிளக்கேற்றுவார். சுவாமியை வணங்கியபின் வீட்டில் உள்ளவர்களை வயதுப்படி கண்மூடிவரச் செய்து பூஜை அறையில் கண்திறந்து காண வைப்பதுதான் விஷூக்கனி காணல். பின் எல்லாருக்கும் காசு தருவார். இதை கை நீட்டம் என்பர். பின், அவரிடம் ஆசி பெறுவர். நீராடியபின் புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தபின் அறுசுவை உணவு உண்பர்.
 
 

ஞாயிறு, மார்ச் 27, 2016

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்

அகண்ட பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பத்தைப்போல் பல்லாயிரக்கணக்கான சூரிய குடும்பங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் படைத்து அனைத்தையும் தன கட்டுப்பாட்டில் இயக்கி அவரவர் தேவைகளையும் ஈடேற்றி வைத்து, அவர் தம் பாவ புண்ணியங்களின் அடிப்படையில் கர்மங்களை நடத்தி வரும் இறைவனின் பேரருள் நம்மை வியக்க வைத்தாலும் எல்லாம் அவன் செயல் என்பது உண்மை. ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களின் ஜென்ம லக்னம் நிர்ணயம் ஆகும் பொழுது அவர்களின் ஏழாம் இடமும் நிச்சயிக்கப்படுகிறது.
 
எழாமிடமும் நிச்சயம் செய்தவுடன் அவர்கனின் திருமண வாழ்க்கையும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது என்பதும் உண்மை. இந்த எழாமிடத்தத்துவம் 7-க்கு 7-ஆகிய லக்னம் என்ற உயிர் 8-ன் 7-க்கு 8 என்ற தனவாக்கு குடும்ப ஸ்தானமாகவும் இருப்பதே ஆண்டவன் படைப்பின் அதிசய ரகசியம் நமக்கு புரியும். இதில் நாம் செய்ய வேண்டியது எல்லாம் 7-ம் இடத்துக்கு 1-மிடம் இணையும் போது 1-க்கு 2-மிடமும், 7-க்கு 2-ம் இடமும் சுபிட்சம் அடையுமா என்பதை தேடி கண்டு பிடிக்க வேண்டியது மட்டுமே. இந்த சூட்சுமமும் ஆண்டவனால் முன்பே தீர்மானிக்கப்பட்டது என்றாலும் ஆண்டவனின் அருள் பெற்றவர்களால் இந்த படைப்பின் பிரம்ம ரகசியம் அறிந்துணர்ந்து உரைக்கப்படும் என்பதும் இறைவன் கட்டளை.
 
இது உலக நன்மைக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்பதும் விதி. நல்ல செழிப்பான நிலத்தில், நல்ல வீரியமுள்ள விதை விழும் பொழுது மிகவும் பயனுள்ள மரங்களும் செடி கொடிகளும் ஆயுள் கால நிர்ணயப்படி நிலைத்த பலன் கொடுத்து மக்களை மகிழச் செய்து தலைமுறைகளுக்கு காலகாலமாகப் பயனளிக்கின்றன. நம் மனித வாழ்விலும் நல்ல தலைமுறைகளை உருவாக்கி உலகத்தில் மக்கள் நல்வாழ்வுக்கு பாடுபடவும் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிக்கவும் வரும் தலைமுறைகளுக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டி அவர்கள் வாழ வழி காட்டவும் நாம் (இரண்டு பேரை) ஆணையும், பெண்ணையும் இணைக்க திருமணம் என்ற ஆயுட்கால பந்தம் ஏற்படுத்தி அதை ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். 
 
நமக்கு முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த இம் மரபுகள் ஆண்டவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டது. இன்று விஞ்ஞான முன்னேற்றத்தில் நாம் சந்திரமண்டலம், செவ்வாய் மண்டலம் என்று முன்னேற்றப்பாதையில் இருக்கிறோம். இவை விஞ்ஞானிகள் நம் முன்னோர்கள் அருளிக் கொடுத்ததில் இருந்து தெரிந்து கொண்ட சில விஷயங்கள். அதன் அடிப்படையில் ராக்கெட், சேட்டிலைட், தானியங்கி சிக்னல்கள் உருவாக்கி பிரபஞ்ச ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
ஆனால் நம் மூதாதையர்கள் யோகம், தவம், அஷ்டமாசித்தி ஆகிய வித்தைகள் மூலம் மேலே   பிரபஞ்சத்தில் சஞ்சரித்து கிரக நிலைகளையும் ஆராய்ந்து உணர்ந்து உருவாக்கி நமக்கு அருளியதுதான் இந்த ஜோதிடம். நம் வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான திருப்பு முனையாக அமையக் காரணம், அது நம் தலைமுறை உருவாகக் காரணமாக இருப்பதே. வாரிசுகளும், தலைமுறைகளும், இனப்பெருக்கங்களும் மனித, மிருக, தாவர மற்றும் இயற்கையின் பிள்ளைகளான மழை, காற்று, பூமி, ஆகாயம், நெருப்பு போன்ற பஞ்ச பூதங்களும் இந்த கடைமையை ஆண்டவன் கட்டளையாக எண்ணி செயல்படுகின்றன.
 
இந்த செயல் பூமியின் சமன்பாட்டை சரி செய்யவே உண்டாக்கப்பட்ட நியதி. "விநாச காலே விபரித புத்தி: என்பது போல நாம் அழிய வேண்டும் என்ற விதி இருந்தால் நம் எண்ணத்தில் நல்ல எண்ணங்கள் தோன்றாது என்பதே சாஸ்திரம். நாம் இந்த மண்ணில் குரூரமான வாரிசுகளை உருவாக்கிவிட வேண்டும் என்ற விதி இருந்தால் நமக்கு இந்த ஜோதிட அறிவு வேலை செய்யாது. நம் கண்களையும் அறிவையும் முடக்கி தவறான பாதையில் இழுத்துச் சென்று தவறான சேர்க்கையினால் பஞ்சமா பாதகங்களை செய்யக்கூடிய குழந்தைகள் இந்தப்பூவுலகிற்கு வழங்கி விடுகிறோம். நமது இந்தச் செயல்களால் பல தலைமுறைகளை நாம் பாவம் செய்வதில் ஈடுபட செய்கிறோம். பின்னர் இதிலிருந்து வெளியே வராமலேயே நாம் மட்டும் அல்லாது நம் தலைமுறையினரையும் நாசம் செய்கிறோம்.
 
இதுவும் ஆண்டவன் செயல்தான் என்றாலும், ஆண்டவனை மறந்து, அவனை நிந்தித்து, அவன் வகுத்துக்கொடுத்த விதிமுறைகளை மறந்து நாம் நம் சுய முடிவுகளை எடுக்கும் பொது வரும் விளைவுகளும் நம்மையே சாரும் என்பதால் நம் தவறுகள் நம்மோடு நில்லாமல், நம் தலைமுறைகளையும் பாதித்துவிடுகிறது. இப்படித்தான் கலியுகம் தோன்றியது. இதில் இன்னும் வேகமாகச்செல்லும் மிகப்பெரிய பிரளயத்திற்கு வழிவகுக்கும்.
 
இதில் இருந்து நாம் தப்ப ஆண்டவன் பாதம் பிடித்து அவன் வகுத்துக் கொடுத்த நியதிகளை கடைப்பிடித்து இந்த திருமணப்பொருத்தம் நூலில் குறிப்பிட்ட விதிகளை கடிமையாக கடைப்பிடித்து தங்கள் துணையை தேர்ந்தெடுத்தால் நாமும் சுகமாக வாழ்ந்து, தலைமுறைகளையும் சுகமாக வாழ வைக்க முடியும் என்பது திண்ணம். நாம் இந்த நூலில் கொடுத்துள்ள இந்த பொருத்த விதிகள் பல நூல்களில் இருந்து திரட்டப்பட்டது. நன்கு ஆராய்ந்து எளிய முறையில் எல்லாராலும் கையாளும் விதமாக இதை உருவாக்கியுள்ளோம். இதை உபயோகித்து சுகமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.
 
இந்நூல் உபயோகிக்கும் முறை:  பொதுவாக நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ளப் போகின்ற ஆணின் ஜாதகத்தையும், பெண்ணின் ஜாதகத்தையும் பொருத்திப்பார்த்து பின் நம் பாரம்பரிய முறைப்படியான தசவிதப் பொருத்தங்கள் உண்டு என்று அறிந்த பின்பே கல்யாணம் நிச்சயம் செய்கிறோம்.
 
எத்தனையோ பொருத்தங்கள் இருந்தாலும் (அதாவது 20 பொருத்தங்கள் இருக்கின்றன) இந்த வேகமான உலகத்தில் இதற்கு யாருக்கும் நேரமில்லாததால் இவற்றைச் சுருக்கி எது வாழ்க்கை சுகமாகவும், சிக்கல் இல்லாமலும் இருக்க அவசியமோ அதை இங்கு நாமே தெரிந்து கொள்ள வசதியாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நூல் வெளியிடும் நோக்கம் பொருத்தம் இல்லாமல் சம்பிரதாய, சடங்குகளை மதிக்காமல் கடந்து போன காலங்களில் நடந்த திருமணங்களால்தான் கலியுகத்தின் செயல்பாடுகள், அதன் குணம் உக்கிரமாக செயல்பட காரணமாக அமைந்தது. நாம் இதை உணர்ந்து கண்டிப்பாக இந்நூலில் உள்ள பொருத்தங்கள் அமைந்தால் மட்டுமே திருமணம் என்றால் நல்ல தலைமுறையும், ஆரோக்கியம் உள்ள வாழ்வும் அமையும் என்பது உறுதி. பலவீனமான குழந்தைகளும், தீய எண்ணங்களுள்ள புத்திரர்களும் பிறக்க காரணமாக இருப்பதும் இந்த தசவிதப் பொருத்தம் இல்லாத தாம்பத்ய சேர்க்கைதான் காரணம். இதை விஞ்ஞானம் "பிளட் க்ரூப்" என்று சொல்கிறது. நாம் ரஜ்ஜு பொருத்தம் என்கிறோம்.
 
ஆண் பெண் உருவ அமைப்புகள், சாமுத்ரிகா லட்சணப்படி லக்னாதிபதி 7-க்கு உடையவனும் நட்சத்திரமும், நட்சத்திராதிபதியும் முடிவு செய்து, அதன்படி உயரம், பருமன், சக்திதிறன், மனசு ஆகியவை நிர்ணயம் செய்யப்பட்டு அதன் இயக்க வளர்ச்சியை கண்காணிக்க சந்திரனிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த சிருஷ்டி ஆண்டவனால் முடிவு செய்யப்பட்டு கிரகங்களிடம் வந்து சேர்க்கிறது. இதன்படி ஒரு ஆண் சிருஷ்டி முடிந்ததும் அதன் இணை பெண் சிருஷ்டியும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு இவர்கள் சேரும் காலமும் நிர்ணயம் செய்து குருவால் கண்காணிக்கப்படுகிறது.  
 
தக்க சமயத்தில் ஆணும், பெண்ணும் சேர்த்து வைக்கப்படுவர். இந்த சேர்க்கை ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது என்பதால் பிரிக்க முடியாது. தலைமுறைகளாகத் தொடரும் என்பது விதி. இப்படியாக கணவன் மனைவி கருத்து ஒற்றுமை, நோய் நொடி இல்லாத வாழ்க்கை, நல்ல தலைமுறை, அதனால் பெரும் யோகம் யாவும் இந்த பொருத்தத்தின் அடிபடையில்தான் நடக்கிறது.
 
நீங்கள் செய்ய வேண்டியது: இந்நூலில் உள்ள கட்டங்களில் ஆண் பெண் நட்சத்திரங்கள் சேரும் இடம் X என்றால் வேண்டாம் என்றும்,  என்றால் செய்யலாம் என்றும் பொருள். இதன்படி இங்கு உள்ள 12 பொருத்தங்களில் குறைந்தபட்சமாக கீழே கொடுக்கப்பட்ட பொருத்தங்கள் இருக்க வேண்டியது அவசியம்.
 
1. ரஜ்ஜு பொருத்தம்: இந்த பொருத்தம் இல்லை என்றால் ரத்தத்தின் தன்மை வேறுபட்டு தலை, சொட்டை, முடிகொட்டுதல், புத்தி மாறாட்டம், வேதக்கயிறு உண்டாகும். இவ்வகையில் சேரக்கூடாத நட்சத்திரங்கள்: மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம்.
 
(அ) வயிறு ரஜ்ஜு: வாயுக்கோளாறு, வயிற்று உப்புசம், உடல் இளைத்தல், ஜீரணக்கோளாறு, அல்சர் போன்ற நோய்கள் உண்டாகும். இவற்றுக்கான நட்சத்திரங்கள்: கார்த்திகை - புனர்பூசம் - உத்ரம் - விசாகம் - உத்ராடம் - பூரட்டாதி.
 
() கழுத்து ரஜ்ஜு: கழுத்துக் கழலை உணவுக்குழாய் பாதிப்பு, காது ஆகிய நோய்கள். இவற்றுக்கான நட்சத்திரங்கள்: ரோகிணி- திருவாதிரை-அஸ்தம்-சுவாதி-திருவோணம்-சதயம்.
 
() துடை ரஜ்ஜு: துடை சம்பந்தமான வியாதிகள். இவற்றுக்கான நட்சத்திரங்கள்: பரணி-பூசம்-பூரம்-அனுஷம்-பூராடம்-உத்ரட்டாதி.
 
() பாதம் ரஜ்ஜு: யானைக்கால், பாதம் மற்றும் கழுத்து பாளம் பாளமாக வெடித்தல் போன்ற நோய்கள். இவற்றுக்கான நட்சத்திரங்கள்: அஸ்வதி-ஆயில்யம்-மகம்-கேட்டை- மூலம்-ரேவதி. எனவே இந்தப் பொருத்தம் மிக முக்கியமானது.
2. யோனிப் பொருத்தம்: இது மிகவும் முக்கியம். கணவன் மனைவி சேர்க்கை சரியான Positions அமைந்து திகட்டாத இன்பம் அளிக்க இந்த பொருத்தம் அவசியம். இந்தப் பொருத்தம் இல்லையென்றால் தாம்பத்யம் இனிக்காது என்பதில் சந்தேகமே இல்லை.
 
3. வசியப் பொருத்தம்: கணவன் மனைவிக்கு ஒருவர் மேல் ஒருவருக்கு இனம் புரியாத ஒரு கவர்ச்சி இருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு பொருளையோ, ஒரு நபரையோ, அல்லது ஒரு செயலையோ தொடர்ந்து பார்க்கும் போதும், ஈடுபடும்போதும் சலிப்பு ஏற்படுவது இயற்கை. அந்த சலிப்பு வராமல் ஆயுட்காலம் முழுவதும் சேர்ந்து வாழ வசியப் பொருத்தம் அவசியம்.
 
4. நாடிப் பொருத்தம்: மனிதனின் உடல் நிலை நன்றாக இடுக்கிறதா என்று பார்க்க நாடி பிடித்து பார்ப்பது மருத்துவர்களின் செயல். கணவன் மனைவி நடத்தும் குடும்ப வாழ்க்கையில் நோய் நொடிகள் வராமல் இருக்க இந்த நாடிப் பொருத்தம் அவசியம். நாடி அடங்கி விட்டால் எப்படி உயிர் பிரிந்து விடுகிறதோ அது போல் நாடிப்பொருத்தம் இல்லாமல் போனால் வாழ்க்கை நோய்களுக்கு இரையாகிவிடும்.
 
5. கணப் பொருத்தம்: கணவன் மனைவி ஒற்றுமையாய் ஐக்கியப்பட்டு வாழ இப்பொருத்தம் அவசியம்.
 
6. தினப் பொருத்தம்: ஒவ்வொரு நாளும் கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ இப்போருத்தம் அவசியம்.  
 
7. மகேந்திரப் பொருத்தம்: புத்திரமும், புத்திரர்களால் உண்டாகும் செல்வமும் கிடைக்க, செழிப்பாக வாழ்க்கை அமைய மகேந்திரப் பொருத்தம் அவசியம்.
 
8. ராசிப் பொருத்தம்: கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அடைய ராசிப் பொருத்தம்.
 
9. ராசி அதிபதி பொருத்தம்: தம்பதியர்கள் அவர்களுக்காக செய்யும் காரியங்களின் பலன் முழுமையாக கிடைக்க ராசி அதிபதி பொருத்தம் அவசியம்.
 
10. ஸ்திரீ தீர்க்கம்: சிறந்த இல்லறம் அமைய ஸ்த்ரீ தீர்க்கம் அவசியம்.
 
11. வேதை பொருத்தம்: கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த வேதையை அறிய வேண்டும். இல்லை என்றால் ஒரே கருத்து இரண்ண்டு பேருக்கும் என்றாலும் அதை இவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நிரந்தரமான கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். இனி சந்தோஷமாயிருந்த தம்பதியினருக்குள் திடீரென்று பிரச்னைகள் உருவாகக் காரணம் என்னவென்றும், அது எவ்வளவு நாள் நீடிக்கும் என்றும் பார்க்கலாம். எலியும் பூனையுமாக இருந்த தம்பதியினர் இப்பொழுது மனமோத்தவர்களாக இருப்பது எப்படி?  
 
இதற்கு காரணம் தசா பொருத்தம் வேதை ஆவதுதான் காரணம். மனைவியின் நடப்பு திசை கணவனின் நடப்பு திசைக்கு சத்ரு திசையாக இருந்தாலும், கணவனின் நடப்பு திசை மனைவியின் திசைக்கு சத்ருவாக இருந்தாலும் இந்த தற்காலிக பிரிவு உண்டாகும். இதை தவிர்க்க முடியாது. ஆனால் தெரிந்து இந்த வேறுபாடு பெரிதாகாமல் சிறிய நிலையிலேயே கட்டுப்படுத்தி அனுசரித்து செல்லலாம்.

  நடப்பு திசை
  ஆண்   
  நடப்பு திசை
  பெண்

 
  சூரியன்
  சனி
  சந்திரன்
  சனி
  சூரியன்
  செவ்வாய்
  குரு
 
  புதன்
  செவ்வாய்
  குரு
  சனி
  சூரியன்
  சுக்ரன்   
  
  
  சனி
  சுக்ரன்
  குரு


 ஆண் பெண் இருவரின் திசைகள் இங்கு கொடுத்துள்ள கட்டத்தில் உள்ள திசைகளாக இருந்தால் அது பொருத்தமானதாக இருக்காது. அப்படி இல்லை திசை பொருத்தம்தானே என்றால் அந்த கால கட்டங்கள் கொடுமையானதாக இருக்கும்.
அந்த கட்டம் காலியாக இருந்தால் சரி மனம் செய்யலாம் - அல்லது X என்றால் வேண்டாம் என்று பொருள். இப்படியாக எல்லப் பொருத்தங்களும் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
இனி இங்கு கொடுத்துள்ள கட்டங்களில் ஆண் பெண் என்று இரண்டு பிரிவுகள். அதில் இருவரின் 27 நட்சத்திரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது-மணப் பெண்ணின் நட்சத்திரத்தை தொட்டு அதே கட்டத்தில் மணமகனின் நட்சத்திரம் வரை நேர் கீழாக வந்து இரண்டு சந்திக்கும் இடத்தில் உள்ள குறியை கவனிக்க வேண்டும். இதில் முக்கியமாக ரஜ்ஜு, வசியம், நாடி, யோனி, கணம், திசா பொருத்தங்கள் மிகவும் முக்கியம்.  இதன் பிறகு திருமண நாள் நிச்சயிக்கப்படும் பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

நல்ல மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆனி, தை, பங்குனி.

நல்ல திதிகள்: துவிதை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி.

நல்ல கிழமைகள்: திங்கள் - புதன் - வியாழன் - வெள்ளி.

நல்ல நட்சத்திரங்கள்: அசுவதி, ரோஹினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி.

நல்ல லக்னங்கள்: ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம். 

மேலும் மனமொத்த தம்பதியராய் வாழ சில குறிப்புகள்: 

1. 7-க்கு உடையவனும், சுக்ரனும், குருவும், கேந்திர, திரிகோணங்களில் பாவக் கிரகங்களுடன் சேராமல் தனித்து இருந்து லக்னாதிபதி ஏதாவது ஒரு ஸ்தானத்தில் பலமாக இருந்தால் சுகமான வாழ்வு.

2. சுபக்கிரகங்களாகிய குறு, புதன், சுக்ரன். சந்திரன் இவர்கள் 2-ம் இடத்தில் இருந்து இருந்து பாவக் கிரகங்கள் பார்வை இல்லாமல் மற்றும் எங்கு இருந்தாலும் சுகமான வாழ்வு. 

3. லக்னாதிபதியும், குருவும் லக்னத்தில் இருந்தால் நல்வாழ்வு. 

4. 2-ம் வீட்டிற்கு உடையவனும், 7-ம் வீட்டிற்கு உடையவனும், குருவுடனும், புதனுடனும் சேர்ந்து 2-ம் இடத்திலேயே இருந்தால் நீண்டகாலம் சுகமாக வாழ்வார்கள். 

5. மணமகன் ஜாதகத்தில் 1,2,7 -க்கு உடையவர்கள் குருவர்க்கம் ஏறினால் நல்ல மனைவியாக அமையும். மேற்கூறிய குறிப்புகள் அனுபவத்தில் உண்மையாக உள்ளன. 

இங்கே கூறப்பட்டுள்ள பொருத்தங்களில் No Compromise என்று Strict ஆக எல்லா பொருத்தங்களும் சேர்ந்து, ஏழாமிடம் இருவர் ஜாதகத்திலும் நல்ல நிலையில் இருந்தால் அமோகமான திருமண வாழ்க்கை அமையும். 

எண் கணித பொருத்தம்: எண் கணிதப்படி திருமணம் செய்ய வேண்டிய பொருத்தமான எண்கள், பிறந்த எண்ணின் அடிப்படையிலும், எதிர்கால எண்ணின் நட்பு முறை அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு எண்கள் பின் வருமாறு: 

  ஆண், பெண்
  பிறந்த எண்
  நட்பு எண்
  1
  2,9,3
  2
  5,1
  9
  1,2,3
  5
  6,1
  3
  1,9,2
  6
  5,8
  8 
  5,6
  7
  6
  4
  9,3,5
திருமண நாள் இந்த நட்பு எண்ணின் வரிசையிலேயே அமைந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே, இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் மிக மிக முக்கியமான ரஜ்ஜு, யோனி, வசியம், நாடி, கணம் ஆகிய பொருத்தங்களுடன்  மேலும் ஐந்து பொருத்தமும் ஆக 10 பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.


 
 
 
 
 







 


 
ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மரமாக கருதப்படுகிறது. மணமக்களில் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பால் மரம் அமைய வேண்டும். அவ்வாறு பால் மரம் அமைந்தால் புத்திர பாக்கியம் உறுதி. இருவருக்கும் பால் மரம் உள்ள நட்சத்திரங்களாக  இருந்தால் மிகவும் நன்று.
 
 

நட்சத்திரங்களுக்கான மரங்கள்
  Thanks to: Kosalan & Web Resources