முருகன் என்றால் அழகு...அழகன் என்றால்
முருகன்...இந்த அழகனின் மற்ற பெயர்களை தெரிந்து கொள்ளலாமே!
1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம்
என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக்
குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை
எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே
முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன்: கு - அஞ்ஞான இருள், ரு -
நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும்
குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால்
வளர்ந்தவன்.
8. கந்தன்: கந்து - யானை கட்டும் தறி. கந்தன்
ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன்.
தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன்: கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன்: சரம் - நாணல், வனம் -
காடு, பவன் -
தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா
உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர்
முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன்: தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள்: செந்நிறமுடையவன், ஞானச்
செம்மை உடையவன்.
14. சேந்தன்: செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன்: சேய் - குழந்தை, குழந்தை
வடிவானவன்.
16. விசாகன்: விசாக நட்சத்திரத்தில் ஒளியாய்
உதித்தவன்.
17. வேலவன், வேலன்: வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான
வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது.
மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன்: ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து -
சிவம், சித்து -
உமை, ஆனந்தம்
- கந்தன், முருகன்
ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன்: சு - மேலான, பிரம்மம்
-பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய
பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான்: முருகன், மண்ணுலகில்
அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம்
பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை
நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை
என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன்: மயில் - ஆணவம், யானை
-கன்மம், ஆடு -
மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
~ வழங்கியவர். திரு. சுரேஷ் பூமாலை, பொள்ளாச்சி