நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 17, 2016

நிகழ்வுகள்


ஆளில்லாமல் இயங்கும் தானியங்கி கார் ஒன்றை உருவாக்கி அசத்திய இந்தியர்!
தனியார் ஐடி நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் பிரிவில் பணியாற்றி வரும் கொச்சியை சேர்ந்த பொறியாளர் தான் டாக்டர். ரோஷி ஜான் தனது ஒய்வு நேரத்தை பயன்படுத்தி இன்று ஒட்டு மொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றார். கூகுள் உள்ளிட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாற்றி வரும் பெரிய திட்டத்தை கையில் எடுத்து சிறிய குழுவை வைத்து கொண்டு அதில் வெற்றி கண்டிருக்கின்றார்.

 
ஆளில்லாமல் இயங்கும் தானியங்கி கார் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் டாட்டா நானோ காரினை ஆளில்லாமல் இயங்க வைத்திருக்கின்றார் இந்த இந்திய பொறியாளர். விலை குறைவு என்பதோடு முன்பக்க என்ஜின் மற்றும் போதிய இட வசதி இருந்ததால் இந்த காரினை தேர்ந்தெடுத்ததாக ஜான் தெரிவித்திருக்கின்றார். 


ஒரு முறை விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் போது அவர் பயணம் செய்த டாக்ஸி ஓட்டுனர் வாகனத்தை இயக்க சிரமம்ப்பட்டதால், வாகனத்தை இவரே வீட்டிற்கு பாதுகாப்பாக எடுத்து வந்திருக்கின்றார். இச்சம்பவத்திற்கு பின் தான் தானியங்கி கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என இவர் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட துவங்கினார். ஐந்து ஆண்டு கடுமையான முயற்சிக்கு பின் இந்த திட்டம் வெற்றி கண்டுள்ளது. 



பலகட்ட சோதனைகளுக்கு பின் சோதனை நானோ காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆக்ட்யூயேட்டர், சென்சார் மற்றும் அவர்களே தயாரித்த மேனுவல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் போன்றவைகளை புதிய டாட்டா நானோ காரில் பொருத்தி அதனினையும் பல்வித சோதனையில் ஈடுபடுத்தியிருப்பதாக ஜான் தெரிவித்துள்ளார். 

 
இவர்கள் கண்டறிந்திருக்கும் வழிமுறையானது மனித ஓட்டுனர்களை விட அதிக திறன் கொண்டிருப்பதாக ஜான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உருவான தானியங்கி கார் எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை விரிவாக விளக்கும் வீடியோவை பாருங்கள்.. 

 

புதன், மார்ச் 16, 2016

நிகழ்வுகள்

 
ஒபாமாவிடமிருந்து அமெரிக்காவின் உயரிய விருது வாங்கும் 6 இந்தியர்கள்!

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பதவி காலம் முடிவதற்க்குள் அறிவியல் மற்றும் தொளினுய்ப துறைகளை சேர்ந்த 106 வல்லுனர்களை சிறப்பிக்க விரும்பியுள்ளார். அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றான இளம் சுயாதீன ஆய்வாளர்கள் விருதை தகுதி பெற்றவர்களில் 6 அமெரிக்க வாழ் இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த விருதானது 1996-ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மூலம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை பெரும் 6 அமெரிக்க வாழ் இந்தியர்கள்:

 மிலிந்த் குல்கர்னி
இணை பேராசிரியர், மின் மற்றும் கணினி பொறியியல் பள்ளி, பர்து பல்கலைக்கழகம். இவரது ஆராய்ச்சி புரோகிராமிங் மொழிகள் மற்றும் கம்பைலர்களைப் பற்றியது.
 
 கிரண் முசுருனு
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் ஸ்டெம் செல் மற்றும் மறு உற்பத்தி உயிரியல் துறையில் உதவி பேராசிரியராக இருக்கும் இவர் நிரந்தரமாக கொழுப்பின் அளவை குறைக்க ஒரு மரபணு எடிட்டிங்' அணுகுமுறையை உருவாக்கியவர் ஆவார். 
 
 சச்சின் பட்டேல்
வண்டேர்பிளிட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் மனநோய், மூலக்கூறு உடலியங்கியல் மற்றும் உயிரி இயற்பியல் ஆகிய துறைகளில் உதவி பேராசிரியர். இவரின் ஆய்வு உளவியல் சீர்கேடுகளில் மூளையின் செயல்பாடும், சிக்கலான பங்கும் பற்றியதாகும்.

 விக்ரம் ஷாம்
நாசாவின் க்ளென் ஆராய்ச்சி மையத்தில் பணி புரிகிறார். பையோமெடிக்ஸ், ஆற்றல் அறுவடை, இயந்திர ஓட்ட இயற்பியல், ஓட்டம் காட்சிப்படுத்தல், மற்றும் நீர் சுத்திகரிப்பு கணிப்பு ஆகிய பல துறைகளில் ஆய்வு செய்கிறார். 

 ஷேவெடக் படேல்
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் மின் பொறியியல் பேராசிரியர். புதிய சென்சார் அமைப்புகள் மற்றும் புதிய தொடர்பு தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்பவர்.
 
 ராகுல் மன்கரம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மின் முறைமை மற்றும் பொறியியல் துறையில் இணை பேராசிரியர். வலைப்பின்னலுக்குள் பதிக்கப்பட்ட அமைப்புகளுள் நிகழ் நேர திட்டமிடல்களுக்கான வழிமுறைகளை பற்றிய ஆய்வில் ஈடுபடுபவர். 

 

வெள்ளி, மார்ச் 04, 2016

நிகழ்வுகள்

மஹா சிவராத்திரி மகோத்ஸவ அழைப்பிதழ் 2016

 
வேண்டுகோள்
"தலைக்கட்டு வரி" செலுத்துதல் நமது தலையாய கடமை. இவ்வருட வரி ரூ500/- ஐ கோவிலுக்கு செலுத்த வேண்டுகிறோம். அன்னதானம், நன்கொடை, பணம், பொருட்கள் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.
அன்புடன்
நிர்வாகக்குழு