வியாழன், மார்ச் 17, 2016

திருக்கோயில்


பெரிய குமாரபாளையம், கப்பேலார் வம்சத்தின் அஜ்ஜி அம்மன் வரலாறு:

 
தேவாங்க வம்சம் கப்பேலார் குல தெய்வமாக விளங்கும் பெரிய குமாரபாளையம் சக்தி சொரூபமாக விளங்கும் அஜ்ஜி அம்மன் திருக்கோவில் ஆகும். கருணை மிகுந்த தெய்வமாகவும், கப்பேலார் வம்ச மக்களுக்கு குல தெய்வமாக விளங்கி வரும் அஜ்ஜி அம்மன் திருக்கோவில், உடுமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. திருப்பூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது.
 
அம்மனின் திருவிளையாடல்
 
தெய்வ சக்தி மிகுந்த அஜ்ஜி அம்மன் பக்தர் அழைத்தவுடன் ஓடி வந்து காப்பாற்றும் தெய்வமாகவும், குழந்தை செல்வத்தை அருளும் தெய்வமாகவும், நோயற்ற வாழ்வு வாழ அருளும் தெய்வமாகவும், பொருட்செல்வம், கல்விச்செல்வம் அருளும் தெய்வமாகவும் விளங்கி வருகிறது.
 
வணங்கும் முறை
 
கப்பேலார் வம்சத்தில் பிறந்த தேவாங்க சமூக மக்கள் உலகில் எங்கு இருந்தாலும் வருடம் ஒரு முறையாவது இங்கு வந்து ஆலயத்தில் அம்மன் அருள் பெற்றால் தீராத வினைகள் அகலும். குடும்பத்தில் செல்வாக்குடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கப்பேலார் வம்ச மக்களுக்கு பெரிய வீடாக பெரிய குமாரபாளையம் அஜ்ஜி அம்மன் கோவில் கொண்டுள்ளார். இந்த அம்மனின் கிளைகள் பூளவாடி, வாளவாடி, பெல்லம்பட்டி, ஆகிய ஊர்களில் கொண்டாடி வருகின்றனர். எங்கு வேண்டுமானாலும் சூழ்நிலை காரணமாக அம்மனை வேண்டலாம். அழைத்தால் ஓடி ஓடி வருவாள்.

அம்மனின் தோற்றம்


பெரிய குளம் நாட்டில் தேவாங்க சமூக மக்கள் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அப்போது தேவாங்க சமூக மக்களின் பெண் மகளை நவாப் திருமணம் செய்ய ஆயத்தம் ஆனார். மன்னரின் ஆதிக்கத்தால் என்ன செய்வது என்று அறியாது கண் கலங்கினார். மனமுருகி வேண்டினார்.' அப்போது நான் பார்த்துகொள்கிறேன், என் ஆலயத்தில் தீபம் ஏற்றி விட்டு கதவை சாத்தி விடு' என்று கூறினாள். உடனே விபூதி தட்டையும் மணி மற்றும் அம்மனின் பெட்டி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறினர். தேவாங்க சமூக மக்களின் நடவடிக்கை மன்னரின் காதுக்கு செய்தி எட்டியது.உடனே குதிரை வீரர்களின் புடை சூழ வந்து கொண்டு இருந்தான். அப்போது தேவாங்க சமூக மக்கள் என்ன செய்வது என்று அறியாது அம்மனிடம் மனம் உருகி வேண்டினர். அப்போது அம்மன் இவர்களிடம் விபூதியை எடுத்து மூன்று முறை போடுங்கள்' என்று அருள் புரிந்தாள். விபூதியை போட்டவுடன் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மன்னன் இக்கரைக்கு வர முடியாமல் போனான். அரசன் இவர்களின் திறமையை உணர்ந்து திரும்பி சென்று விட்டனர். தேவாங்க சமூக மக்கள் ஊர் ஊரக விபூதி தட்டையும், மணி அம்மன் பெட்டி ஆகியவற்றை தூக்கிகொண்டு கிராமத்தில் கிடைத்த வேலையை செய்து கொண்டு கூலி பெற்று வாழ்கை நடத்தி வந்தார்கள்.ஊர் ஊராக வந்த போது சின்ன பூளவாடி என்ற கிராமத்தில் வந்து தங்கி வேலை செய்து வாழ்ந்தார்கள். இவர்கள் வேலைக்கு செல்லும் பொழுது அம்மனின் பெட்டி, விபூதி தட்டு, மணி இவற்றை வைக்கோல் போருக்கு உள்ளே ஒளித்து வைத்து இருந்தார்கள். தோட்டத்து சொந்தக்காரர் ஒருநாள் வைக்கோல் எடுக்க சென்ற போது நாக சர்ப்பம் இவரை வைக்கோல் போருக்கு அருகே நெருங்க விடாமல் பாதுகாத்து வந்தது. இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தேவாங்க சமூக மக்களுக்கு செய்தி எட்டியது. உடனே ஊர் மக்களிடம் நடந்த விபரத்தை கூறினர், ஊர்மக்கள் அன்று முதல் அம்மனை வணங்க ஆரம்பித்தனர்.
 
 

அம்மனுக்கு ஆலயம் உருவாகுதல்
 
பெரிய குமாரபாளையம் லட்சுமண செட்டியார் வகையறா, முத்தஞ்செட்டியார், சவுண்டப்ப செட்டியார், கந்தசாமி செட்டியார் வகையறா, அப்பிலிங்க செட்டியார் வகையறா, பூளவாடி சமாஜி வகையறா, திருப்பூர் நடராஜ் செட்டியார் வகையறா ஆகியோர் இணைந்து ஒரு மேடை அமைத்து அம்மனை வழிபட ஆரம்பித்தனர். கோயில் நிர்வாகத்தை பெரிய பொன்னான், சின்ன பொன்னான் ஆகிய இருவரும் நடத்தி வந்தனர். ஒரு நாள் திடீரென்று பெரிய பொன்னான் என்று கூறும் கந்தசாமி செட்டியார், M.சந்திரசேகரை அழைத்து எங்களுக்கு பின்னல் நீதான் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இறைவனை வழிபட்டும் இறைவனுக்கு தொண்டு புரிய வேண்டும், என்று கட்டளை இட்டார். "இதை கண்டிப்பாக நடத்தி கொடுத்தால் தான் உனது குடும்பம் குழந்தைகளும் நன்றாக செல்வ செழிப்புடன் இருப்பார்கள்". என்று கூறினார். உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தேன். மூன்று நாட்கள் கடும் விரதம் இருக்க சொன்னார்கள். இருந்தேன், அப்போது எலுமிச்சை கனியும், தெய்வ சக்தி படைத்த சிறிய பெட்டி ஒன்றை கொடுத்து "நீ அழைக்கும்போது ஓடி வருவேன் உனக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன்" என்று கூறினார்.
தெய்வ சக்தி படைத்த அந்த சிறிய பெட்டியில் என்ன இருக்கிறது என்று இதுவரை பார்த்ததில்லை. இதை கவனமுடன் பார்த்து வரவேண்டும் என்று கூறி விட்டனர். அம்மன் திருவடிகளை வணங்கினால் தீராத துன்பங்களை தீர்த்து அருள்புரியும் சக்தியாக விளங்குவாள்.
 
கனவில் அம்மன் தோன்றுதல்

காங்கேயம் M. சந்திரசேகர் அவர்களின் மனைவியிடம் கனவில் வந்து கப்பேலார் வம்சத்து பெரிய நாயகியாக விளங்கும் அஜ்ஜி அம்மன் நாக சர்ப்பம் வடிவில் வந்து "ஏன் என்னை கவனிபதில்லை என்றும் கோயிலில் வந்து ஊழியம் செய்ய வேண்டும்" என்று அருளியது. பல மடமனைகள், கெத்திகை மனைகள் உருவாக மூல காரணமாக இருந்த இந்த அஜ்ஜி அம்மனை வணங்கி நலம் பெறுவோம்.
  ~ நன்றி:காங்கேயம் M.சந்திரசேகர், தேவாங்கர் இதழ்












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக